பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு ஒன்றும், பல பாடல்கள். ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும், சில நூல்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்மொழிகளிலும் வெளிவந்துள்ளன. கோகுலம்-கெளரவ ஆசிரியர்: 'கல்கி நிறுவனம் வெளியிடும் 'கோகுலம்’ எனும் மாத இதழின் கெளரவ ஆசிரியராக 1983 முதல் 1989 வரை பணியாற்றினார். குழந்தைக் கவிஞர் தொடர்பான நூல்கள் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு -டாக்டர் பூவண்ணன் வானதி பதிப்பகம், சென்னை-17. குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பா ஒரு வழிகாட்டி -கதி. கணேசன் அருள் சிவம் நூலகம், காரைக்குடி, குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன் -வே. கிருட்டிணசாமி மணிவாசகர், நூலகம், சிதம்பரம். கவிதை தந்தவர் கதை (பாரதியார், கவிமணி, வள்ளியப்பா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு. தமிழக அரசின் பரிசு பெற்றது.) -புலவர் அ. அப்துல் கரீம் தமிழ் நிலையம், புதுக்கோட்டை. மேலும், குழந்தைக் கவிஞரின் நூல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் முதல் முதலாக சென்னைப் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் அம்புஜம் யுவச்சந்திரா. குழந்தைக் கவிஞரின் கவிதைகள் ஆய்வு செய்து கேரளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றுள்ளார் திருமதி ஒ. பத்மகுமாரி. வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் குழந்தைக் கவிஞர் நிகழ்த்திய கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைச் C சொற்பொழிவுகள், 208