பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இனியும் தொடர்ந்து இங்கே இருக்க ஆசைப்படுவது சரியன்று’ எனக் கருதி, காரைக்குடிக்குச் சென்றேன். காரைக்குடிக்குச் சென்ற இரண்டு ஆண்டுகள் வரை எனக்கு ஒய்வு இல்லை. வங்கிப் பணியில் மிகுதியாக ஈடுபட நேர்ந்தது. அதன் பின்னர் என் அருமை நண்பர் ரத்னம் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது. அவர் விரைவில் குணமடைவார். அவரது உதவியுடன் புத்தகத்தைச் சிறந்த முறையில் கொண்டுவந்து விடலாமென நினைத்தேன். அவர் விரைவில் குணம்பெற வேண்டுமென, அவருடைய எண்ணற்ற இனிய நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஆண்டவனிடம் வேண்டினேன். ஆயினும், எங்கள் வேண்டுதலுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லை. உடல்நலம் குன்றிய ஈராண்டுகளில் அவரை இழக்க நேரிட்டது. - ரத்னம் அவர்களின் மறைவு என்னைப் பெரிதும் பாதித்தது. புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்தது. சிரிக்கும் பூக்கள் எப்போது வெளிவரும் என்று கேட்ட நண்பர்களுக்கு 'விரைவில் வெளிவரும் எனக் கூறிக் கொண்டிருந் தேனே தவிர, எவ்வித முயற்சியிலும் ஈடுபடத் தோன்றவில்லை. சென்ற ஆண்டு திடீரென ஒருநாள் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ரத்னம் பெயர் சூட்டிய ஒரு புத்தகம் வெளிவராமல் இருப்பதா? நிச்சயம் வெளிவரவேண்டும். அவருக்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக வேண்டும் என்பதே அந்த முடிவு. 6