பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முயற்சிகளுக்கெல்லாம் பேருதவி புரிந்து வருபவரும், குழந்தைகளுக்குப் புதிய புதிய பொருள்கள் குறித்து, கற்பனை நயத்துடன் பல பாடல்களை இயற்றி வருபவரும், தற்போது சாகித்ய அகாதமியின் மண்டலச் செயலாளராகச் சென்னை யில் பணியாற்றியவருமாகிய திரு. தம்பி சீனிவாசன் அவர்கள், குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்கு பவரும், காரைக்குடி குழந்தை இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், என் மேல் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் வைத்துள்ளவருமாகிய திரு. பொன்ராசன் அவர்கள், இந்நூல் உருவாகப் பல வகையிலும் உதவி புரிந் துள்ளவரும், குழந்தை எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளருமாகிய திரு. எச். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆகியோருக்கும் இன்னும் இத் தொகுப்பு நன்முறையில் வெளிவரப் பல்வேறு கட்டங்களிலும் ஆர்வமுடன் உதவிய அன்பர்கள் பலருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இந்நூலுக்குப் பொருத்தமான ஒவியங்களை வரைந்து தந்துள்ள புகழ்மிக்க ஒவியர்களான திருவாளர்கள் உமாபதி, லதா, சுப்பு, விஜயன், ஆழி.வே.ராமசாமி ஆகியோருக்கும் என் நன்றி. இத்தொகுப்பிலுள்ள பாடல்களில் சிலவற்றைத் தவிர மற்றவை யாவும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தவையே. கல்கி தீபாவளி மலர்களிலும், 10