பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது






அ, ஆ



அ, ஆ என்றேனே
அத்தை வீடு சென்றேனே.

இ, ஈ என்றேனே.
இட்டலி எட்டுத் தின்றேனே.

உ ஊ என்றேனே.
உடனே காபி குடித்தேனே.

எ, ஏ என்றேனே.
ஏப்பம் நன்றாய் விட்டேனே.

ஐ என்று சொன்னேனே.
அங்கே நீட்டிப் படுத்தேனே.

ஒ, ஓ என்றேனே.
ஒருமணி சென்று எழுந்தேனே.

ஒள என்று சொன்னேனே
ஆடிப் பாடிக் குதித்தேனே.

ஃ என்று சொன்னேனே.
அக்கக் காவெனச் சிரித்தேனே!

22