பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டவன் தந்த கை

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அள்ளிச் சோறு தின்பதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அழகாய் எழுதிப் படிப்பதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அனுதினம் வேலை செய்வதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அனைவருக் குதவி செய்வதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அவரை நன்றாய்த் தொழுவதற்கு.


31