பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தெரியுமா தம்பி?

நெட்டை யான காலுடனே
நீள மான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில்கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்அது

என்ன தெரியுமா?-தம்பி
என்ன தெரியுமா?

முறத்தைப் போன்ற காதுடனே
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வ லத்தில் வருமேஅது

என்ன தெரியுமா?-தம்பி
என்ன தெரியுமா?

5

35