பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


அதனை அன்போடு நடத்தினான். பின்னர் தன்னோடு குடிப்பு அருந்த அந்தக் குரங்கினை அழைத்து வரும்படி அருகிலிருந்தவர்களிடம் ஆணையிட்டான். பின் ஒருமுறை மது அருந்தியதும் குரங்கு தன் கவிப்பினையும் உடையினையும் அகற்றி எறிந்துவிட்டுக், கத்திக் கொண்டு அங்குமிங்கும் குதித்துத் தாவி விருந்து மண்டபத்தில் பேரிரைச்சலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியது.

அதிகாரி சொன்னான் “ஓ விலங்கே, உனக்கு இங்கிதம் தெரியவில்லை. மதுஅருந்தும் முன் நீ மனிதனாக இருந்தாய். குடித்தபின் நீ மனித இயல்பை மட்டுமில்லை தோற்றத்தையே இழந்தாய்” என்று.

97. கீழ்மை உணர்வுள்ள அரசு அதிகாரி

கஞ்சத்தனமிக்க அரசு அதிகாரி ஒருவர் பணியின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்குத் தலைநகரிலிருந்து அனுப்பப்பட்டான். அந்த அமைச்சகத்திற்குள் நுழையும் முன் தன்னைப் போலவே பசியோடிருந்த தன் ஏவலன் முன்னிலையில் ஒரு கோப்பை கம்பங் கூழ் அருந்தினான். பின் அந்த ஏவலன் தானும் ஒரு குடுவைக் கூழ் சாப்பிட எண்ணி, மற்றவர்கள் முன்னிலையில் அதற்காகப் தன் ஆண்டையிடம் பணம் கேட்டால் மறுக்கமாட்டான் என எண்ணிப் பணம் கேட்டான். அதிகாரியும் அவ்வாறே வேண்ட வெறுப்பாகப் பணம் கொடுத்தான்.

பின் அமைச்சகத்தில் தன் பணியினை முடித்துக் கொண்டு, வீடு திரும்ப வண்டியேறினான். ஏவலன் வண்டியின் முன்னிருந்து குதிரையை ஓட்டினான். வண்டி புறப்பட்டதும் அந்த அதிகாரி ஏவலனிடம் “மரியாதை தெரி-