பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

117



மறுநாள் காலை அவன் மட்டும் கடன் வாங்கியவன் வீட்டிற்கு முன்னதாகவே வந்து, தன் கடன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, கடன் வாங்கியவன் சொன்னான்: "நீங்கள் நேற்று வீட்டினுள் உட்கார இடமில்லாமல் முற்றத்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்ததைக் குறித்து மிகவும் வேதனைப்பட்டேன், அதனால்தான் இன்று முன்கூட்டியே வந்து இடம் பிடித்துக் கொள்ளவே உங்களை முன்னதாக வரும்படி அழைத்தேன் என்றான். அதிர்ந்தான் கேட்டவன்.

116. கனவும் நினைவும்

கடன் வாங்கிய ஒருவன் கடன் கொடுத்தவனிடம், "நான் இந்த உலகில் நீண்ட நாள் வாழமாட்டேன் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நேற்று இரவு நான் இறந்து போவது போல் கனவு கண்டேன்” என்றான். இதனைக் கேட்டுக் கடன் கொடுத்தவன், “அப்படியெல்லாம் நடக்காது. கனவுலகில் காண்பதற்கு நேர்மாறாகத் தான் நினைவுலகில் நடக்கும்” என்று மறுமொழி பகர்ந்தான்.

மீண்டும் ஒருநாள் இருவரும் சந்தித்தபோது கடன் கொடுத்தவனிடம் கடன் வாங்கியவன் சொன்னான். "நேற்றிரவு கண்ட கனவில் உங்கள் கடனையெல்லாம் நான் திரும்பத் தந்து விட்டேன்” என்றான். கடன் கொடுத்தவனுக்குப் பதில் சொல்ல நாவெழவில்லை.

117. குரங்கின் அளவு

மாமதுரை நடுவர் ஒருவர் தன் மேலதிகாரியைக் காண நேர்ந்தது. தங்கள் அலுவலகப் பணிகள் பற்றிப் பேசிய பின்