பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

29



இரண்டாவது கணவனுடன் ஓர் இரவு கழித்தப்பின், அவன் அவளை அனுப்பி விட்டான். ஏன் என்னை அனுப்புகிறாய் என்று அவள் அவனை கேட்டபோது அவன் சொன்னான் “நீ இப்போதே ஒரு மகனை ஈன்றெடுப்பாய் என்று எதிர்பார்த்தேன்” என்று.

30. என்னை ஆய்ந்து கொள்ளுங்கள்

மாவட்ட பொறுப்பு அதிகாரியிடம் தன் மாடு திருடு போய்விட்டதாக முறையீடு செய்தான் ஒரு மனிதன். அதிகாரி கேட்டார் “எப்போது?” என்று. “நாளை” என்றான் அந்த மனிதன். அதிகாரி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். இதனைக் கவனித்த மாவட்ட அதிகாரி சட்ட அதிகாரியைப் பார்த்து “நீ தான் திருடியுள்ளாய். அப்படித்தானே? அதை எங்கே மறைந்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.