பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவிந்தன், டிலிட்.,

35


வைத்திருக்கிறோம்” என்றார் மணமகளின் தந்தை. “அவை யாவை?” என்று வினவினார் மணமகளின் தந்தை.

“ஒரு தெய்வீக கொக்கும், மிக வியக்கத்தக்க கடற் குதிரையும்” என்று மறுமொழிப் பகர்ந்தார் மணப் பெண்ணின் தந்தை. “எனக்கு அவற்றை ஒரு முறை காட்டுங்கள்” என வேண்டினார் பிள்ளையின் தந்தை. பெண்ணின் தந்தை நாள் ஒன்றைக் குறித்துப் பின் விடைபெற்றுச் சென்றார்.

வீட்டையடைந்து பெண்ணின் தந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்டார். வாடியத் தந்தையிடம் மகன் விளக்கம் கேட்டார். தந்தை சொன்னார் “நேற்று நான் நம் பெண்ணின் வீட்டாரிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன்.