பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்




38. மனைவிக்குப் பயந்த மாவட்ட நீதிபதி

மனைவிக்கு அஞ்சிய மாவட்ட நீதிபதி ஒருவர் இருந்தார். ஒருநாள் தனது வீட்டின் மதிற்சுவருக்கு வெளியே யாரோ சிலர் சண்டையிட்டும் இறைச்சல் கேட்டது. உடனே தன் ஏவலனைக் காரணம் கண்டுவர அனுப்பினார் நீதிபதி. ஏவலன் திரும்பி வந்து, “நமது காவலர் அறையின் முன் ஒரு கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மனைவி கணவனை அடித்துக் கொண்டிருக்கிறாள்”


என்றான் நீதிபதி. அதுகேட்டு பற்களை ‘நறநற’வென்று சினத்தில் கடித்தார். நான் மட்டும் அவனிடத்தில் இருந்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?...என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மனைவியின் தலை