பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

49



47. இருக்க ஓர் இருக்கை வேண்டும்

இரண்டு உடன்பிறந்தவர்கள். மூத்தவர் செல்வர். இளையவர் எளியவர். “நீ எப்படி செல்வன் ஆனாய்” இளையவன் கேட்டான். “பன்றிகளையும் ஆடுகளையும் கடவுளுக்குப் படைத்தேன். பணக்காரன் ஆனேன்” என்றான் மூத்தவன்.

இளையவன் மனைவியிடம் வந்து, பணக்காரனாகும் முறையினைச் சொன்னான். அவளும் “அதனாலென்ன நம்மிடமும் நான்கு கால்கள் உள்ள நாற்காலிகள் இரண்டுள்ளன. பன்றிக்கும் ஆட்டிற்கும் பதிலாக இவ் இரண்டையும் இறைவனுக்குப் படைக்கலாம். இவற்றுக்கும் எட்டுக்-