பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்




ஒருநாள் மருத்துவ ஆய்வினைப் பெறுவதற்காக ஒரு மனிதன் அவர் வீட்டுக் கதவினைத் தட்டினான். ‘நோயாளி யார்?’ என்று மருத்துவர் கேட்டார். ‘என் மனைவி’ என்றார் வந்தவன்.

இதனைக் கேட்ட மருத்துவர் விழிகளில் நீர் ததும்ப “ஆ! என்ன வேதனையிது. உன் மீது யாரோ ஒருவர் மையல் கொண்டுவிட்டார்” என்று மருத்துவர் தம் மனைவியைப் பார்த்துப் பதறிச் சொன்னார்.

55. பழக்கத்தின் விளைவு

எவ்வளவு குறைவான அளவு குடித்தாலும், மிதமிஞ்சிய குடியில் இருப்பது போல் பாவனை செய்து கீழ்த் தரமான செயல்களைச் செய்து வந்தான் குடிகாரன் ஒருவன். ஒருநாள் அவன் தன் மனைவியிடம் மது கேட்டான். அவன் செயலைக் கண்டு ஏற்கனவே வெறுப்புற்றிருந்த அவன் மனைவி சாராயத்துக்குப் பதிலாக சாயத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தாள். அவனும் அதைக் குடித்து முடித்தான். சற்று நேரத்துக்குப் பின் போதை தலைகேறியவன் போல் நடிக்கத் தொடங்கினான். வியப்புற்ற மனைவி வேதனையிலும் வெறுப்பிலும் அவனை நன்றாகத் திட்டித் தீர்த்தாள். பின்னர் அவனிடம் “நான் உனக்குத் தந்தது சாயத் தண்ணீர் தான்; சாரயம் அன்று. பின் எப்படி உனக்குப் போதை ஏறும்; தாறு மாறாய் நடக்க முடியும்?” என்று கேட்டாள். அவனோ பொறுமையாக “நான் அப்போதே நினைத்தேன் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று ஆகவே தான் இன்னும் எனக்குப் போதை குறையவில்லை” என்றான்.