பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

59




58. தலைநகரத்தில் மட்டுமே
வட்ட நிலவு

தலைநகரைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞன் ஒருவன் தன் தந்தையிடம் எப்போதும் தலைநகரின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வந்தான். ஒருநாள் மாலையில் தந்தையும் மகனும் நிலவொளியில் பொறுமையாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாய் சென்ற வழிப்போக்கன் “ஆ! என்ன அழகான நிலவு இது!” என்று விண்ணை நோக்கிய வண்ணம் நிலவை வியந்து சொன்னான். இதனைக் கேட்ட மகன் சொன்னான் “இது என்ன அழகு தலைநகரத்தில் உள்ள நிலவு இதனினும் அழகிற் சிறந்தது” என்று.