பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்



தலைநகர் பெருமையைக் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்தத் தந்தை “முட்டாளே, வானில் உலவிவரும் நிலவு எங்கும் ஒன்றுதான். அது எப்படி தலைநகரத்து நிலவு இதனினும் அழகிற் சிறந்ததாயிருக்க முடியும்?” என்று கேட்டு ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அறைபட்டு அதிர்ந்த மகன் தேம்பித் தேம்பி அழுதவண்ணம் தன் தந்தையிடம் “தலைநகரில் நீங்கள் கொடுத்த அடி இதனினும் மிகக் கடினமாக இருந்ததே”என்றான்.

59. மகனின் பெருமை

தந்தையும் மகனும் ஒருநாள் நகரத்து வீதி வழியே உலா வந்தனர். பாதையில் சென்ற ஒருவர் தந்தையை