பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

79




75. அறிஞனின் தீர்ப்பு

செல்வன் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினான் ஒரு சிற்றூரான். நூறு காணி நஞ்சை நிலம் வாங்கினால்தான் நான் நிறைவடைவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான் அவன். இதனைக் கேள்வியுற்ற அவனது அண்டை வீட்டான் “நீ நூறு காணி நஞ்சை நிலம் வாங்கி விடுவாயானால், அதில் விளையும் நெல் அனைத்தையும் வாங்கப் பல இலக்கம் பணம் சேர்த்து விடுவேன்” என்று எதிர் அறைகூவலும் உறுதியும் செய்தான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.