பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன்., டிலிட்,

83


சிலைகள் அமைந்திருக்கும் வண்ணம் கண்டார். சினம் கொண்டார். அவர் சொன்னார்” நமது நாட்டில் சைவத் தொண்டர்கள் மிகவும் புனிதமானவர்கள். அப்படியிருக்கச் சிவனின் சிலையைப் புத்தனின் வலப்புறம் அமைத்தது ஏன்? என்று வினவினார். மீண்டும் அச் சிலைகளை இடம் மாற்றி அமைத்துவிட்டு அவர் அவ்விடம் விட்டு அகன்றார். அவர் அகன்றதும் மீண்டும் பெளத்தத் துறவி வந்தார். சிலைகளின் இருப்பிடத்தை மாற்றியமைத்தார். இவ்வாறு மாறி மாறி இரு சமயத்தினரும் சிலைகளை மாற்றி மாற்றி அமைத்தனர். இறுதியில் அவை இரண்டுமே மண் சிலைகள் ஆனதால் கீழே விழுந்து நொறுங்கின. கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்த சிவனின் நொறுங்கிக் கிடக்கும் புத்தனைப் பார்த்துப் புன்னகைத்தார். பின் அவர் “முன்பு நாம் இருந்த வண்ணமே அவரவர் இடத்தில் அமர்ந்து நமது பணிகளைச் செய்தோம். இப்போதோ நமது அடியார்கள் நமது அழிவுக்கு அவர்கள்தாம் காரணம்” என்பதை மெய்ப்பித்து விட்டனர்” என்று துயரத்தோடு சொன்னார்.


79. அழகற்ற நிலவு

மற்றவர்களோடு உரையாடும் போது, அடக்கமாகப் பேசும் பழக்கமுள்ள ஒரு மனிதர் இருந்தார். ஒருமுறை அவர் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார். அந்திக் கருக்கலில் அழகு நிலவினைக் கண்ட அந்த விருந்திரனர் “ஆ என்ன அழகான நிலவு” என்று வியந்துரைத்தார். உடனே அடக்கமாகவே பேசும் அந்த வீட்டுக்காரர் கைகட்டி, வாய்பொத்தி மிகவும் அடக்கத்தோடு “என்னை நீங்கள் மிகவும் புகழ்கிறீர்கள். என் எளிய குடிலில் நிலவுக்குக் கூடப் பெருமை கிடையாது” என்றார்.