பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்



80. மூடன்

இரண்டு உடன்பிறந்தவர்கள் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றனர். நண்பர் வீட்டின் ஒரு பலகையின் அருகில் கிடந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தனர். பலகையின் மீது உலர்ந்த அத்திப் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுவரை அந்தப் பழங்களைப் பார்த்தறியாத இளையவன் அண்ணனிடம் அவை என்னவோ என்று கேட்டான். அண்ணன் “முட்டாள்!” என்று சொன்னான். பின்னர் கொடிமுந்திரிப் பழங்கள் பரிமாறப்பட்டன. மீண்டும் இளையவன் அண்ணனிடம் “அது என்ன?” என்று வினவினான். அண்ணன் மீண்டும் அதே விடையைச் சொன்னான்.