பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

89



அந்த அறுவைச் சிகிச்சை வல்லுனரோ “நான் உடம்பின் வெளியே உள்ள பகுதிகளை அறுப்பதிலும் அகற்றுவதிலும் தான் வல்லுனன். அதனை நான் செம்மையாகச் செய்து விட்டேன். இப்போது நீங்கள் உடம்பின் உட்பகுதிகளை அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுனரை நாடுங்கள்” என்று ஆய்வுரை வழங்கினார்.

85. குருதிக் கொடை

பிறவுயிர்களுக்குத் தன் அரத்தத்தை (குருதி) அளித்து அவற்றை வாழவைக்க நினைத்தார் பெளத்தத் துறவியொருவர். நினைத்த வண்ணமே கொசுக்களைத் தன் குருதியை உறிஞ்சி உயிர்வாழ அனுமதித்தார். சில நாள்கள் கொசுக்கள் பல்கிப் பெருகின. அவரால் கொசுக்கடியைத் தாங்க முடியவில்லை. கடிதாங்காத துறவி தன்கைகளால் கொசு கடிக்கும் இடங்களில் பட்டு, பட்டு என்று அடித்துக் கொண்டார். இப்படித் தம் உடம்பை தாமே அடித்துக் கொண்டிருக்கும் நிலைகண்டு திகைப்புற்ற வழிப்போக்கன் ஒருவன் துறவி-