பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

மண்ணுக்கும் பெண்ணுக்கும் -

மக்களைத் தாங்குதலால் மாண்போகம் தந்திடலால் தக்கபடி நாடுபதி தான்பெறலால் - மிக்ககவின் ஏரால் வளம்பெற் றெழுபருவம் சேர்தலால் பாராம்மண் பெண்னெனவே பார்.

மண்ணுக்கு மக்களைத் தாங்குதலால் - உலகிலுள்ள மக்களைத் தாங்குதலால் (தரை என்ற பெயர் பூமிக்கு உண்டானது, தாங்குவது என்ற காரணத்தால்). மாண்போகம் தந்திடலால் - சிறந்த ט_u$rr விளைச்சலைத் தருவதனால் (பயிர் விளைச்சலை இருபோகம், முப்போகம் என்பது வழக்கம்). தக்கபடி நாடு பதி தான் பெறலால் - இடத்துக்கு ஏற்ற வகையில் நாடு என்றும் ஊர் என்றும் பெயர் பெற்ற இடங்களைத் தான் பெற்றிருப்பதால் (வெவ்வேறு நாடுகளும் அந்த நாடுகளில் வெவ்வேறு ஊர்களும் இருக்கின்றன). மிக்க கவின் ஏரால் வளம் பெற்று - மிகுதியாக உள்ள அழகு பெற்ற ஏரினால் உழப் பெற்ற வளத்தை அடைந்து (ஏர் உழும் கருவி, எழு பருவம் சேர்தலால் - பயிர்கள் எழுகின்ற பருவத்தைச் சேர்வதனால் (உழுது பிறகு பருவத்திலே பயிர்கள் எழும் பருவத்தே பயிர் செய் என்பது ஒளவை வாக்கு. பார் ஆம் மண்-நிலவுலகத்தில் அமைந்த மண்.

பெண்ணுக்கு : மக்களைத் தாங்குதலால் - கருவுற்ற போது குழந்தைகளை வயிற்றிலும் பிறந்த பிறகு மடியிலும் மார்பிலும் தோளிலும் தாங்குவதால். மாண் போகம் தந்திடலால் - இல்லறத்தில் மாட்சி பெற்ற இன்பத்தைத் தருவதனால் (அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப் பொருளில் ஒன்றாகையால் மாண் போகம் ஆயிற்று). தக்கபடி நாடு பதிதான் பெறலால்

7