பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 118

அந்தகர் - அந்தகர்

பந்தம் அறப்பிற விப்பெரு

வாரியிற் பாடுறுவார் வந்தணு கிப்பணி வார்எனின் இன்பம் வழங்குபிரான் துந்தல் இலாச்சுடர் வேட்டிச் சுரத்திவள் நோய்அறியா தந்தக ரைக்கொல எண்ணின

ரே இவர் அந்தகரே.

பந்தம் அற - பாசம் நீங்க. பிறவிப் பெருவாரியில் பாடு உறுவார் - பிறவியென்னும் பெருங்கடலில் அகப்பட்டுத் துன்பத்தை அடைபவர்கள். நூந்தல் இலாச் சுடர் தூண்டாத விளக்குப் போன்ற சிவபெருமான். வேட்டீச்சுரத்து - திருவேட்டீசுவரன் எழுந்தருளிய தலத்தில். இவள் நோய் அறியாது - இந்தத் தலைவியின் காதல் நோயை அறியாமல். அம் தகரைக் கொல எண்ணினரே - அழகிய ஆட்டைக் கொல்ல எண்ணினார்களே. இவர் - இந்தச் செவிலித்தாயும் நற்றாயும். அந்தகரே - கண் இல்லாதவர்களே. தகர்ஆடு. -

குருடர்களைக் கொல்ல எண்ணினர் : இவர் யமன் போன்றவர்கள் என்பது தொனி. அந்தகர் (அம் தகர்) அழகிய ஆடு, குருடர்.

கொம்பற்ற தேகர்

கம்புற் றலறும் கடல்சூழும்

சென்னைக் கடிநகருள் வெம்பற் றவாஅறுத் தோர்பணி

ஈசன்றன் வேட்டிவெற்பர் தம்பற் றுறுவாள்.ஒர் நோயால்

வருந்து தலைஒழிக்கக் கொம்பற்ற தேகர் தலைதுணிப் பான்யாய் குறித்தனளே.