139 இரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
அஞ்சு-ஆறு-மூன்று-ஒன்று
வெஞ்சமந் தன்னிற் கொடுஞ்சூ ரனைக்கொன்ற
வேல்முருகன் தஞ்சம் அருள்காந்தக் குன்றினி லேராசி
சக்கரத்தில் அஞ்சையும் ஆறையும் மூன்றாக் குதலின்றி
ஆதிஒன்றை எஞ்சிட்ச் செய்ய நினைத்தனள் அன்னை;
எவன்செய்வதே.
வெம் சமந்தன்னில் - கொடிய போரில். தஞ்சம் அருள் - அடைக்கலம் வழங்குகின்ற. ராசி சக்கரத்தில் - பன்னிரண்டு ராசிகள் உள்ள சக்கரத்தில். அஞ்சையும் ஆறையும் மூன்று ஆக்குதல் இன்றி - ஐந்தாவது ராசியாகிய சிங்கத்தையும் ஆறாவது ராசியாகிய கன்னியையும் மூன்றாவது ராசியாகிய மிதுனம் ஆக்குவதில்லாமல்; சிங்கம் போன்ற தலைவனையும் கன்னியாகிய தலைவியையும் ஒன்றாக இணையச் செய்யாமல் என்பது கருத்து; மிதுனம் - இணை. ஆதி: ஒன்றை - ஆதியாக உள்ள ஒன்றாகிய மேடத்தை; ஆட்டை. எஞ்சிடச் செய்ய இறந்து படச் செய்ய.
சிங்கம், கன்னி, மிதுனம், மேடம் என்னும் ராசிகளை அவற்றின் நிலையைக் குறிக்கும் எண்களால் சுட்டியது ஒரு நயம். -
ஆனை - சிங்கம் - ஆடு
ஊனை உருக்கும் திருப்புகழ்ப் பாடல்
உவந்தபிரான்
தேனையும் பாகையும் போன்மொழி வள்ளி
திருக்கணவன்
தானுறு காந்த மலையில்யாய் ஆணையைத்
தாக்கியஅன் r