பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 1.33

தகராலயம் -காதல்

சிகரா லயம்பெறு காந்த மலைக்குகன்

சேவடியை

நிகர்ஆர் மலர்கொண்டு பூசித் திலாரெ நீர்மையின்றி -

மகரா லயமுர சான்றுயர் போக

மறியறுத்தால்

தகரா லயம்பெற்றுக் காதலின் பந்தரும்

சால்புறுமே. -

சிகர ஆலயம் பெறு - கோபுரத்தோடு கூடிய திருக்கோயிலைப் பெற்ற நிகர் ஆர் - ஒளி நிறைந்த, நீர்மையின்றி - நல்ல இயல்பு இல்லாமல். மகராலய முரசான் துயர்போக - கடலாகிய முரசை உடைய காமன் செய்யும் மையலாகிய துயர் போவதற்கு; மகராலயம் - மகரத்துக்கு இருப்பிடமான கடல். மறி அறுத்தால் - ஆட்டை வெட்டினால், தகராலயம் பெற்றுக் காதல் இன்பம் தரும் சால்பு உறுமே - இந்த ஆடா மரணத்தை அடைந்து தலைவிக்குக் காதலின் பத்தைத் தரும் தகுதியை அடையும்; ஆட்டை வெட்டினால் இவளுக்குக் காதலின்பம் உண்டாகும்ா என்பது கருத்து. தகரா - ஆடா; லயம் - மரணம்.

தகராலயம் என்றது தகராகாகாசம் ೭೧767 இடம்ாகிய இதயக்குகை. بیانیه ஞானம் கைவந்தவர்களால் அறிந்து இன்புறத்தக்கது. தகராலயம் பெற்றால் காதலின்பம் வருமா என்ற பொருள் ஈற்றடியில் தொனித்தது.