பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

மானிடன்

மையற் பிணிதவிர்க்கும் மாமயிலைக் காபாலி ஐயம் எடுத்தே அலைந்தனன்காண் அம்மானை, ஐயம் எடுத்தே அலைந்தனனே ஆமாயின் வையத்தார் தேவாய் மதிப்பாரோ அம்மானை ? மானிடனாய் எண்ணி வழிபட்டார் அம்மானை.

மையல் பிணி-மயக்கமாகிய நோயை. ஐயம்

எடுத்தே-பிச்சையெடுத்தே. வையத்தார் - பூமியில் உள்ளவர்கள். தேவ்ாய் - தெய்வமாய். மானிடனாய் எண்ணி - மனிதனாக எண்ணி என்பது தொனிப்

பொருள்; மானை இடப்பக்கத்தில் ஏந்தியவனாகத் தியானித்து என்பது இயல்பான பொருள்.

மானிடன், மான் இடன்.

குறைமதியன்

வாய்த்த புகழ்மயிலை

மாதேவன் தன்காற்கீழ்த் தேய்த்ததொரு திங்களைத்தன்

சென்னிவைத்தான் அம்மானை; தேய்த்ததொரு திங்களைத்தன்

சென்னி வைத்தான் ஆமாயின், கோத்த அறிவிற்

குறையுண்டோ அம்மானை ? குறைமதியன் என்றெவரும்

கூறுவர்காண் அம்மானை.

இறைவன் தக்கயாக சங்காரத்தின்போது சந்திரன்ைக் - காலால் தேய்த்தான் என்பது புராண வரலாறு. திங்கள் சந்திரன். காலால் தேய்த்ததைத் தலையில்