பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

விவேகானந்தர் கல்லூரிக்குப் பேசப் போயிருந்தார். இவர். இவரை அறிமுகம் செய்து வைக்கும்போது திரு.சேஷாத்திரி, "இவரும் நானும் கூடப் படித்தோம்" என்றார். இவர் பேசும்போது, "இவர்கூடப் படித்தார்; நான் குறையப் படித்தேன்" என்றார். -

முன்னேற்றம்

அன்பர்கள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லக் காருடன் வந்திருந்தார்கள். ஒருவர்,

"ஐயா, நீங்கள் முன்னேறுங்கள்" என்று சிலேடையாகச் சொன்னார். இவர் உடனே, "தெரியும். தெரியும், உங்கள் திருட்டுத்தனம் நான் உங்களுக்குப் புறங்காட்ட வேண்டும் என்பது உங்கள் ஆசை" என்று கூறிச் சிரிக்க வைத்தார்.

கனியும் காயும்

டில்லி மாநகரில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் கி.வா.ஜ. ஒரு பரிசு பெற்றார். அப்போது இவருடன் சில நண்பர்களும் இருந்தார்கள். தமிழிசை மணி ஆதிசேவுையர் என்னும் சாகித்தியர் கர்த்தா அவர்களில் ஒருவர். அவரும் இவரும் ஒர் அன்பர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே முற்றத்தில் தேங்காய்த் துண்டுகளைத் தனியாகவும் அதற்கு அருகில் மிளகாய் ப் பழத்தைத் தனியாகவும் உலர்த்தியிருந்தார்கள். ஆதிசேவுையர் தேங்காயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். கண்ட இவர், "பழம் இருக்கக் காயை தின்கிறீர்களே; கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று குறளின்படி யிருக்கிறீர்களே!" என்றார். - -