பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

விழும்" என்பார்கள். அதாவது வேளைக்கு ஐம்பது விருந்தாளிகள் அவர் வீட்டில் உண்பார்களாம். விருந்தோம்புதலால் அவர்கள் பணம் சிறப்படையும். இப்போது என்ன விழுகிறது? விழுகிறது இலை. (இலை - இல்லை.)

குற்றம் குறை

.ே ப. சும் .ெ ப ா ரு ட் டு ஒரூருக்குப் போய்விட்டுத் திரும்பினார் இவர். இவருக்கு விடை கொடுத்தபோது அந்த ஊரில் இவரை உபசரித்த அன்பர், "உங்களுக்கு எவ்வள வோ உபசாரம் செய்ய வேண்டும். என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. குற்றம் குறை இருந்தால் மன்னிக்க வேண்டும்" என்றார்.

"குற்றம் குறைதான்" என்று பதில் வந்தது. (குற்றம் இல்லாத குறை.)

சொன்னத்தைக் கேள்

ஒரு நண்பர் ஏதோ ஒரு வேலையை ஒரு தொழிலாளியை அழைத்துச் செய்யச் சொன்னார். அவன் சொன்ன கூலி அதிகமாக இருந்தது. "என்ன அப்பா இந்த வேலைக்கு இவ்வளவு கொடுப்பார் களா?"