பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あZ சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

பல் வலி

ஒருவருக்குப் பல் வலி வந்து மிகவும் துன்புற்றார். இவர் அவரைக் காணச் சென்றார். முகத்தை அடிக்கடி சுளித்துக் கொண்டே அவர் பேசினார். "என்ன உடம்பு ?" என்று கேட்டார் இவர். "பல் வலி" என்றார். "ஒருவலி வந்தாலே சங்கடம். பல்வலி வந்தால் சொல்ல வேண்டுமா?" என்றார் இவர். (பல்வலி - பல்லில் வலி, பலவகை வலிகள்.)

ஊசியும் தொண்டையும்

குழந்தைக்கு அதன் தாய் உப்புமான்வை உண்ணும்படி அளித்தாள். அது முதல் நாள் செய்தது. குழந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒக்காளித்தது. அருகில் இவர் இருந்தார். அந்தப் பெண்மணி, "உப்பு மாவைத் தின்ன முடியவில்லை யா? அது தொண்டையில் குத்துகிறதோ?" என்று கோபித்துக் கொண்டாள். இவர் அந்தப் பழைய உப்புமாவில் சிறிது வாங்கி வாயில் போட்டுப் பார்த்தார். "ஆமாம், தொண்டையில் குத்தத்தான் குத்தும் என்றார். "ஏன்?" என்று தாய் கேட்டாள். "ஊசி யிருக்கிறது" என்று சொல்லிச் சிரித்தார். இவர். பழைய உப்புமா அல்லவா?

வழுக்கெடுக்கும்

ஒரு தலத்துக்கு இவரும் இவர் குடும்பத்தினரும் போயிருந்தார்கள். சில நண்பர்களும்-உடன் வந்தார்கள்.