பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 54

போட்டார்கள். மற்றவர்களுக்குப் பலகை இல்லாதது கண்டு இவர், "வேண்டாம்" என்றார். "பரவாயில்லை; உட்காருங்கள்" என்று நண்பர் சொன்னார். "இரண்டு கை இருந்தும், சாப்பிடும்போது ஒரு கைதானே உபயோகப்படுகிறது? பலகை எதற்கு ?" என்றார். இவர். (பலகை - அமரும் பலகை, பல கைகள்)

நாற்காலி மனிதர்

கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை. இவரைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள். இவர் மறுத்தார். "நீங்களே தலைவராக அம்ரவேண்டும்" என்றார்கள் அன்பர்கள். "இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை?" என்று கேட்டார் இவர்.

காலடி

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவர்கள் காலால் நடந்தே இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார்கள் என்பதை ஒரன்பர் சொன்னார். "ஆதி சங்கரர் அப்படிச் செய்தார். இவர்களும் அவரைப்போல் செய்கிறார்கள்" என்று மற்றோர் அன்பர் சொன்னார். இவர் அப்போது, "ஆம், அவர் பிறந்ததும் காலடியில்; பாரத பூமி முழுவதும் சென்று சிறந்ததும் காலடியிலேயே" என்றார்.

நாடாக் கட்டில்

இரவில் வெளியூரில் தங்கியிருந்தார். இவர். ஒரு நண்பர் வீட்டில் இவர் உண்டு உறங்கினார். படுப்பதற்கு அந்த வீட்டுக்காரர் கட்டில் கொடுப்பதாகச் சொன்னார். அது நாடாக் கட்டில். அதில் ஒருகால்