பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ66

வாயைத் திறக்க

வெளியூருக்குப் பேசப் போயிருந்தார் இவர். சில நாள்கள் தங்கினார். ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் விருந்துணவு வழங்கி னார்கள். அதனால் இவர் சிறிது சாப்பிட்டார். "இந்த மாதிரி ஊர்களுக்கு வந்தால் இரண்டு வகையில் வாயைத் - திறக்க வேண்டியிருக்கிறது. பேசவும் வாயைத் திறக்கிறேன்; சாப்பிடவும் வாயைத் திறக்கிறேன். இரண்டாவது வகையில் திறப்பதுதான் சங்கடமாக இருக்கிறது" என்று சொல்லி இங்கிலீஷில் G&srcircraff: "I can dojustice to any number of meetings but not to such eatings." -

கவலை இல்லை

சேலத்தில் இப்போது மிகவும் புகழ் பெற்ற சாரதா கல்லூரி இருக்கிறது. முன்பு அது உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. ஊருக்குப் புறம்பே புன்செய் நிலங்களுக்கிடையே இருந்தது. பள்ளி நிர்வாகிகள் இவரைப் பேச அழைத்திருந் தார்கள். அங்குள்ள அமைப் பெல்லாம் காட்டினார்கள்., கிணற்றைக் காட்டி, "இது வரைக்கும் கவலை ஏற்றம் .