பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

வெற்றி கண்டாய், நாங்கள் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? தேவ சேனாபதி என்று நினைக்கும் போதெல்லாம் நீ செய்த பேருதவி நினைவுக்கு வரும். எப்போதும் 鹰 தேவ சேனாபதியாகவே இருக்க வேண்டும். நான் வளர்த்து வரும் தேவசேனை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வேறு வகையில் என்றும் தேவ. சேனாபதியாகத் திகழ வேண்டும் என்று வேண்டினான். முருகன் அவன் விருப்பப்படியே தேவசேனையை மணந்து கொண்டான்.

~. ஒன்றுக்கு

கோம்பை என்னும் ஊரில் பாரதி விழா நடைபெற்றது. இவர் தலைமை தாங்கினார். காலையில் 9 மணி முதல் 12-45 வரையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் கலைந்தவுடன் யாவரும் அவசர அவசரமாகச் சிறுநீர் கழிக்கப் போனார்கள். ஒருவர், "ஒருவர் ஒன்றுக்குப் போனால் எல்லாருமே போகிறார்கள். கொட்டாவியைப் போல இதுவும் தொற்றுப் போல இருக்கிறது என்றார். இவர், "ஆம், கடிகாரம்கூட ஒன்றுக்குப் போகப் போகிறது" என்று அதைச் சுட்டிக் காட்டினார். அப்போது மணி 12-55. .

LD L- சாம்பிராணி

மட சாம்பிராணி என்பதற்கு இவர் கூறும் விளக்கம்: மடங்களில் மூட்டை மூட்டையாய்ச் சாம்பிராணி வாங்கிப் போடுவார்கள். நாளடைவில் அது மட்கிவிடும். பிறகு அதை எடுத்துப் புகைத்தால் வாசனையே இராது.

$

அதனால் அதை உவமை கூறுகிறார்கள்.