இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
101
மேக :இதுதான் என் தாய் தந்த பொக்கிஷம்?
உதய :பெற்ற தாயே பெண்ணின் வாழ்வைக் கொல்வ
- துண்டா?
மேக :இல்லை. கண்கண்ட கருணையின் தெய்வம்
- என்தாய்! அந்தக் கருணையின் கண்ணிர்
- வெள்ளத்திலே என் உள்ளம் தூய்மை பெற்றது.
- தடுமாறிய நான் தெளிவு கண்டேன்! இதுதான் உண்மை...!
உதய :அப்படியானால் கள்ளமற்ற நம் உள்ளங்கள்
- செய்த முடிவெல்லாம்.
மேக :சிறு பிள்ளைகள் பேசுகின்ற சிங்கார மழலை
- மொழி, கால வெள்ளத்திலே கரைந்து போகும்
- களிமண் மண்டபங்களைக் கட்டினோம்! நிலை
- யானதென்று நீர்க்கோலம் போட்டு விட்டோம்.
- இளமையின் இன்பம். முதுமையின் துன்பம்!
- முடிவில் மரணம்! அதற்குள் வீண் துயரம்
- எதற்காக இளவரசே! . *
உதய : முடிவற்ற இந்த மூட வேதாந்தம் உன் மதியில்
- ஏன் புகுந்தது மேகலா விருப்பான உன்னெஞ்சில்
- வெறுப்பான நெருப்பைக் கொட்டியவர் யார்?
- கள்ளம் கபடமற்ற உன் வெள்ளை உள்ளத்தில்
- கவலை என்னும் விஷத்தை யாரோ கொட்டி
- விட்டார்கள். கண்ணே! தோன்றியதெல்லாம்
- மறைவது இயற்கை அதற்காகத் தோன்றிய
- உடனே அழிந்து போக வேண்டுமா மேகலா?
- இந்த மாயாவாதம் உலகிற் பரவினால் உலகமே
- பாழாகி விடும் கண்ணே! -
மேக :இந்த உலகம் நம்மை வாழ விடாது இளவரச
- வேண்டாம்! எனக்காகத் தாங்கள் சிரமப்பட
- வேண்டாம்! தாங்கள் இந்தச் சோழ ராஜ்யத்தின்
- சக்கரவர்த்தியாக வேண்டியவர்கள்! உங்கள்
- பெருமையான சரித்திரப் பொன்னேடுகளில் என்