120
- சிரிப்பதிகாரம்
உதய
8
உதய
குற்றத்தை எல்லாம் நானே ஏற்றுக் கொள்கிறேன். உன்னைப் பார்த்தது முதல் குற்றம். காப்பாற்றி யதும் குற்றம். பேசியதும் குற்றம். பழகியதும் குற்றம்! விரும்பியதும் குற்றம் உன் காரணமாகப் பெற்றோரைப் பகைத்துக் கொண்டதும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம்! இந்தக் குற்றங்களுக்கெல்லாம் சிகரமாய், இப்போது கடைசிக் குற்றத்தையும் செய்யப் போகிறேன். என்னைத் தடுக்கச் சக்தி உள்ளவர்கள் வரட்டும் பார்க்கலாம் மேகல்ா இதுவரை என் சுய உருவம் பேசியது. இனி என்னில் ஆடும் கோரமான பேய்தான் உன்னுடன் பேசப் போகிறது! மனிதனின் ஆசை நிறைவேறாதபோது அவன் பேயாகிறான்! மரியாதையாக என்னுடன் புறப் படு. இல்லையேல் உன்னை எப்படியும் அடை யும் ஆற்றல் எனக்குண்டு என்னடி நீலி! எங்கே ஒடப் பார்க்கிறாய்? • -
ஐயோ! ஆண்டவா
ஹஹஹஹ். ஆண்டவனே வந்தால்கூட, அவனை எதிர்ப்பேன்! பார்த்து மயக்கி விட்டுப் பாசாங்கா
செய்கிறாய்? பேசி வசப்படுத்தி விட்டுப் போகவா
பார்க்கிறாய்? ஆடி, அடிமையாக்கி விட்டு அகலவா பார்க்கிறாய்?
வேண்டாம். பைத்தியமாக வேண்டாம்.
ஹஹ்ஹஹ். பைத்தியம்தானடி பைத்தியம்தான். பிரேமை பிடித்தவரெல்லாம் பைத்தியம்தான். உலகில் அழகு பிறந்த அன்றே பைத்தியமும் பிடித்துவிட்டது. காற்றின் பைத்தியம் மேகத்தைத் துரத்துகிறது! மேகத்தின் பைத்தியம் மலையிலே மோதுகிறது! மழையின் பைத்தியம் நதியிலே ஒடுகிறது! நதியின் பைத்தியம் கடலிலே முடி
கிறது! கடலின் பைத்தியம் முடிவற்ற ஒசையாய்