எஸ்.டி. சுந்தரம் :
i}}
& ?
&h
127
காட்சி - 15
இந்த மருந்தைச் சாப்பிடப்பா உடம்பு குணமாகும்!
மனநோய்க்கு மருந்துண்னும் மடையன் நானல்ல நண்பா!
அப்போ மந்திரமாவது போடுறேன் வா!
என்னை மயக்கும் மந்திரம் அந்த மேகலையின் மயல் விழிகள்தான் கலைமணி!
இந்தா பாரப்பா சூரியனை தூர இருந்து பார்ப்ப தோடு சந்தோஷம் அடையணும். கிட்டப் போனா சுட்டு எரிச்சுப்பிடும். மேகலை ரொம்ப மேலே போயிட்டா! நீ வரவரப் பாதாளத்துக்குப் போயிகிட்டே இருக்கே சரி வா! நாம் கப்ட லேறிச் சாவகத் தீவுக்கு உல்லாசப் பயணம் போய் வரலாம்.
நான் கப்பலேறினால், கடலே பற்றி எரிந்துவிடும் கலைமணி! - .
போடு சக்கை அப்படி எரியுதா உன் உடம்பு!
ஆம்! என்றும் ஆறாத ஊழி நெருப்பு, யுக யுகாந்தரமாக எரிந்து கொண்டே இருக்கும்!
இதோ பாரு! அப்படித்தான் அவ என்னப்பா உலக அழகியா எல்லாப் பெண்களைப் போலத் தானே?
நண்பா மேகலை ஒரு மோகன வடிவம்!
என் கண்களை உன் கண்களில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும். அவளை நீ ரசிக்க
முடியும்!