பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

—————————————169

வைத்திருந்த தலைவலி மருந்தை எடுத்து தடவிக் கொள்ளுகிறார்கள்.

ஒரு இரகசியம் மேற்கண்ட தலைவர்கள், அந்தப் பிரதேச முழுமைக்கும் தலைவலி மாத்திரை விற்கும் பிரதம ஏஜெண்டுகள் என்பதை வாசகர்கள் அறிய வேண்டுகிறோம். புரட்சி இயக்கம் என்பதெல்லாம் வெறும் புரட்டு! இவர்கள் பேச்சினால் ஊரில் தலைவலி மருந்து அதிகமாக விற்பனையாகிறது. இவர்களது வியாபாரம் வாழ்கிறது. ஆகவே இவர்கள் அசல் தலைவர்கள் அல்ல. தலைவலித் தலைவர்கள். இதைப் போன்ற தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லாவிட்டால் வருவதை அனுபவியுங்கள்.