பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

181




இந்தச் சிரிப்பு என்ற ராட்சஸ குணத்தால்தான் உலகத்தில் எல்லாவிதச் சிரமங்களும் உண்டாகின்றன.

உலகில் ஒன்றுமில்லாதவர்கள் தான் சிரிப்பார்கள். நான் கூறுவது பைத்தியக்காரத்தன மாக இருக்கலாம். ஆனால், உலகில் பெரிய உண்மைகள் எல்லாம் முதலில் பைத்தியக் காரத்தனமாகத்தானிருக்கும். சில உதாரணங்களைத் தருகிறேன். நீங்களே எண்ணிப் பாருங்கள். உண்மை விளங்கும். உள்ளங்கைப் பூசணிக்காய் போல் தெரியும்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள், மேதாவிகள், வீரர்கள் யாராவது ஒருவராவது சிரித்த முகத்தோடு இருந்ததாகக் கேள்விப் பட்டதுண்டா? இல்லை. காரணம் பண மிருப்பவன் ஒருமுறை சிரித்தால் அடுத்த நாள் ஆயிரம் குசேலர்கள் அவன் வீட்டு வாசலில் முற்றுகை போட்டு தர்மங்கேட்டு (கேரோ) செய்வார்கள். - - மேதாவிகள் சிரித்தால் ஸ்குரு லூஸ் மாதிரி தெரியும் என்பதற்காக அவர்கள் எல்லாம் கன்னத்திலோ அல்லது தலையிலோ கைவத்த படி கலங்கிய கண்களோடு காட்சி தருவார்கள்.

வீரர்கள் எனப்படுவர்கள், சதா மரணத்தைப் பற்றியே நினைப்பதால் சிரிப்பு வருவதில்லை அப்படியே வந்தாலும் அது பிரதேச சிரிப்பாகத் தானிருக்கும். அட இதுவெல்லாம் தொலையட்டும். உலகையே ஏதோ சந்தி சிரிக்க வைத்து விட்ட தாக ஜம்ப மடித்துக் கொண்ட அந்த சிரிப்பரக்கன் பர்னாட்ஷா இருந்தாரே, அவர்