பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சிரிப்பதிகாரம்




செரிக்காத வயிற்றுக்குச் சோறெதற்கு?
தீராத வியாதிக்கு மருந்தெதற்கு?
ஜெனிக்காத பிள்ளைக்குப் பேரெதற்கு?
ஆடாத மயிலுக்கு அழகெதற்கு?
பாடாத குயிலுக்குக் குரல் எதற்கு?
ஜெயிக்காத தேர்தலில் செலவெதற்கு?
ருசிக்காத வாய்க்கு விருந்தெதற்கு?
ரசிக்காத பாவிக்குக் கவி எதற்கு?

கூட்டம் : வாழ்க சிரிப்பு வாழ்க நல்லுலகம்

வென்றது பட்டி மண்டபம்
(நாடகம் முடிவு)