இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
19
சாமி : அடே! இந்தக் குட்டித்தாடி யார்?
பேபி : இவன் என் ப்ரண்ட் மிஸ்டர் ராஜா!
சாமி : ராஜாவா - எந்த ஊர் ராஜாப்பா? இவரு ராணி
- எங்கே?
பேபி : முட்டாள்! நாங்கள் அடுத்தவாரம் காலேஜ்லே
- லைலா மஜ்னு நாடகம் போடப்போகிறோம்.
- அதுக்காக ஒத்திகை நடத்துகிறோம்.
சாமி : நாடகத்திலே இது என்னா கட்டமப்பா!
பேபி : இது ஸ்வாரஸ்யமான காதல் கட்டமடா!
சாமி : இது என்ன எழவுக் காதல். தாடிக் காதல்.
பேபி : அடே! உனக்கொன்றும் தெரியாது. காதலர்கள்
- தாடியோடு சந்திக்கும் ஒரு பயங்கரமான கட்டம்
- இது. பரபரப்பான சுறுசுறுப்பான விறுவிறுப்பான
- காட்சி!
சாமி : அடப்பாவமே! என்னா பேபியிது. உங்கப்பா
- கோடீஸ்வரர். அவருக்கு பிள்ளையா வந்த
- நீ, இப்படி எல்லாம் பிச்சைக்கார வேஷம்
- போட்றது நல்லாவா இருக்குது.எனக்கொன்னும்
- பிடிக்கலே பேபி, என்ன தம்பீ - நீங்க சொல்லுங்க
- - பணக்காரர் புள்ளை பிச்சைக்கார வேஷம்
- போடலாமுங்களா?
பேபி : பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசம் இந்த
- பேபியிடம் கிடையாது.. நான் ஒரு பெரிய சமரஸ
- வியாதி.
சாமி : என்னா_ என்னா! சமரஸ வியாதி - என்னாப்பா
- இது. இதுவரையிலும் கேள்விப்படாத புது
- வியாதியாயிருக்குது!
பேபி : சம... ரஸ... வியாதி..!
சாமி : பரவாயில்லை பேபி! வியாதியிலேகூட ஒரு
- சமரஸ வியாதி இருக்குதே. எனக்குத் தெரியலே