இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
சிரிப்பதிகாரம்
- செளக்கியமா! தாத்தா - எங்க காலேஜிலே
- பேபிக்கு பபூன்னு பேரு.
ம.பூ : அப்படியா - ஒவல்டின் கொண்டு வாம்மா!
வாணி : ஆகட்டும் தாத்தா
- (மேஜை மீதிருத்த பிளாஸ்கிலிருந்து ஊற்றித் தருகிறாள்)
பூபதி : அற்புதமாயிருக்கு - பேஷ் - வாணிக்கு ஒவல்டின்
- கூட போடத் தெரியுமா?
ம.பூ : என்னப்பா பேபி - சாப்பிடு - ஒவல்டின் கேக்
- எல்லாம் சாப்பிடு.
பேபி : தாத்தா இந்த மேல்நாட்டு உணவுகள் எல்லாம்
- எனக்கு பிடிக்காது தாத்தா, நான் அவைகளை
- வெறுக்கிறேன்.
ம.பூ : பின்னே என்னதாம்பா உனக்குப் பிடிக்கும்?
பேபி : சொல்லட்டுமா தாத்தா! எனக்கு சுத்தமான
- சுதேசிப் பலகாரமான இட்லிதான் தாத்தா
- பிடிக்கும், பாருங்க தாத்தா, இந்த இட்லியின்
- மகிமையைப் பற்றி ஒரு கவிகூடப் பாடியிருக்கேன்.
- அதைப் பாடட்டுமா தாத்தா!
பூபதி : டே பேபி...
ம.பூ : பரவாயில்லை எங்கே பாடு பார்ப்போம்.
(உடனே பாடுகிறான்)
பேபி : யாமறிந்த உணவுகளில் இட்லியைப் போல்
- இனிதாவதெங்கும் காணோம்
- தேமதுர வடநாட்டு ஜாங்க்ரி எல்லாம்
- தென்னகத்து இட்லியின்முன் நிற்குமோதான்?
- நாமமது ஸ்வீட் என்று நெய்யே இன்றி
- நாக்குகளை அறுப்பதனால் என்ன லாபம்?
- சேமமுற சாப்பாடு செழிக்க வேண்டில்
- சேர்ந்தெல்லாம் இட்லிகளை ஆதரிப்போம்