எஸ்.டி. சுந்தரம் ;
65
காட்சி - 3
இடம் : பூம்புகாரில் மணிமேகலை வீடு
மேகலை
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக :
- சுதமதி :
- சுதமதி! இங்கு வந்தும் என் தாயைக் காண
முடியவில்லையே! எல்லோருக்கும் இன்பம்! எனக்கு மட்டும் துன்பமா? அம்மாவைச் சீக்கிரம் பார்க்க வேண்டுமே!
புத்த சங்கத்தோடு எங்கேயோ யாத்திரை போயிருக்கிறார்களாம். அவங்க வந்ததும் நாம் தான் அங்க போய்ப் பார்க்கணும் பாட்டி சித்ராபதியைக் கேட்டா, பஞ்சாங்கம் சரி யில்லைங்கிறாள்.
பெற்ற தாயைப் பார்ப்பதற்குப் பஞ்சாங்கம் எதற்கு சுதமதி: - பாட்டியின் பிடிவாதம் அப்படி! நீ கவலைப் பட்டாதே மேகலா, சீக்கிரம் உன் தாயைக் கான நான் ஏற்பாடு செய்கிறேன். இதோ பார் எங்கே, உன் விரல்கள் இவ்வீணைக்கு உயிர் தரட்டும். சுதமதி! இந்த வீணையின் நரம்புகளில் நாதம் ஒளிந்திருப்பது போல், என் உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் உறைந்திருக்கிறது! ஆசையின் மற்றொரு பெயருக்குத்தான் சோகம் என்று பெயர். -
ஆசை என்றால்?
அதுவா! பாசத்தின் குழந்தை! அன்பு என்னும் மாறு வேஷத்தோடு ஆடுகின்ற சாத்தான்!