78 * சிரிப்பதிகாரம்
பன்னிர்? எங்கே மாலை? அது, கிது எல்லாம் கொண்டு வாங்க! .
சித்ரா : ஆ இவரா அவர்?
மாமா : இவரே தான்!
சித்ரா : நான், இவர் தான் மாப்பிள்ளைன்னு நெனைச்சி. சாது : அவன் என் நண்பன். பெட்டியோடு வந்தான். சாம்பி : அந்தப் பெட்டிக்குத் தாம்பா இவ்வளவு
மரியாதை, சாது : பரவாயில்லை! சரி சாம்பிராணி! இனி நீ
போகலாம். உன் உதவிக்கு நன்றி.
சாம்பி : நண்பா ஜாக்கிரதை இந்த வரவேற்பு இங்கேயே மூச்சுத் திணறுது! இன்னும் உள்ளே போனா என்ன ஆகுமோ. பழைய குளம்டா வழுக்கி விழுந்துடாதே! - சாது : முட்டாள்! அனுபவமில்லாதவன்! சரி. போய்வா! (போகிறான் உம். மாமா! பெட்டியைப் பாட்டி பார்த்தாளா?
சித்ரா : அதுக்கென்னாங்க? அப்புறம் பார்த்தாப் போச்சு! எனக்குக் காசு பெரிசில்லிங்க பாசந்தான் பெரிக!
மாமா : பாசமா? ஐயோ உலக்த்துக்கே இவர் கடன் கொடுப்பாரே! ஆமாங்க ஆஸ்தி பெரிசில்லிங்க. அன்புதான் பெரிசு. தங்கம் பெரிசில்லிங்க உங்க தன்மைதான் பெரிசு,
சித்ரா : இருங்க வர்ரேன்.
மாமா : என்னங்க அலங்காரம் எப்படி? சித்ரா : மேகலை எங்கே? மாமா : மேலே. இருக்காங்க வரச்சொல்லட்டுங்களா?
சித்ரா : ஐயோ! அவளுக்குச் சிரமம் வேண்டாம். நானே
அங்கு போறேன்!