பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தனித்து இருப்பதற்கு சீதா அஞ்சவில்லை. ஆனால் ஆற்றின் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. அன்று காலை, தண்ணிர் எடுத்து வரப் போனபோது, ஆற்றில் தண்ணர் அதிகரித்திருந்ததை அவள் கவனித்தாள். வழக்கமாய் பறவைகளின் எச்சங்கள் சிதறிக் கிடக்கும் பாறைகள் திடீரென்று மறைந்து விட்டன.

"தாத்தா, ஆறு பெருகி வந்தால் நான் என்ன செய்வேன்?"

மேடான பகுதியில் நின்றுகொள்."

மேட்டுப் பகுதிக்கும் தண்ணிர் வந்துவிட்டால்?"

கோழிகளைக் குடிசைக்குள் கொண்டு போ. நீயும் உள்ளேயே இரு."

"குடிசைக்குள் தண்ணிர் வந்தால்?"

"அரசமரத்தின் மேலே ஏறு. அது வலிமையான மரம். கீழே விழாது. தண்ணிரும் அவ்வளவு உயரம் வராது." .

"ஆடுகள், தாத்தா?"

"ஆடுகளை நான் கொண்டு போவேன், சீதா. அவற்றை விற்க நேரலாம், உன் பாட்டிக்கு உணவுக்கும் மருத்துக்கும் செலவுபண்ண. கோழிகளை, அவசியப்பட்டால், கூரை மேலே விட்டுவை. ஆனால் அதி கமாகக் கவலைப்படாதே. தண்ணிர் அவ்வளவு அதிகம் வராது" என்று, அவர் சீதாவின் தலையைத் தடவிக் கொடுத்தார்.

***

அன்று மாலை மீண்டும் மழை பெய்தது. பெரிய பெரிய துளிகள் ஆற்றின் பர்ப்பை வகுப்படுத்தின. ஆனால் கதகதப்பான மழை. சீதா அதில் சஞ்சரித்தாள். நனைவது பற்றி அவள் பயப்படவில்லை. அது அவளுக்குப் பிடித்திருந்தது. குடிசைக்குள் புழுக்கமாக இருந்தது. அடுப்புத் தீயின் வெப்பத்தில் அவளுடைய மெல்லிய ஆடை சீக்கிரம் உலர்ந்து விடும்.

அவள் கொட்டுகிற மழையில் திரிந்து, கோழிகளைத் துரத்தி, குடிசைக்குப் பின்னால் இருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்தாள். தீங்கற்ற கபிலநிறப்பாம்பு ஒன்று, வளைக்குள் வெள்ளம் புகுந்ததால் வெளிப் பட்டு, திறந்த வெளியில் ஒடியது. சீதா ஒரு கம்பை எடுத்து, பாம்பைத் துாக்கி, பாறைக் குவியல்களுக்கு இடையில் போட்டாள். பாம்புகளிடம் அவளுக்கு விரோதம் இல்லை. அவை எலிகளும் தவளைகளும் பெருகி விடாது தடுத்தன.

முடிவில் சீதா குடிசைக்குள் போனபோது, அவளுக்குப் பசித்தது. வறுத்த பயறை அவள் தின்றாள். சிறிது ஆட்டுப் பாலைக் காய்ச்சினாள்.

பாட்டி ஒருதரம் கண் விழித்தாள். தண்ணீர் கேட்டாள். தாத்தா பித்தளைத் தம்ளரில் நீர் கொடுத்தார்

***

33