பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மழையினால் மறைக்கப்பட்டது. சிறு குடிசை இருந்தது; மரமும் இருந்தது.

அவள் சுறுசுறுப்பானாள்.கோழிகளுக்குத் தீனி போட வேண்டும். அவை தீனி தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிறிது தானியம், உருளைக்கிழங்குத் தோல், வேர்க்கடலைத் தோல் ஆகியவற்றை அவள் அவற்றிடம் வீசினாள்.

பிறகு அவள் துடைப்பம் எடுத்து குடிசையைப் பெருக்கினாள். கரி அடுப்பைப் பற்ற வைத்தாள். நாளை பால் இராது," என்று நினைத்தாள்.

மலைகளிலிருந்து இடி உருண்டு இறங்கியது. பூம்-பூம்-பூம்...

சீதா நெடுநேரம் உள்ளே இருக்க முடியவில்லை. வெளியே போனாள். ஆற்றை ஊடுருவிப் பார்த்தாள். இப்போது அது அதிக அகலமாகத் தோன்றியது. அது கரைகளைத் தாண்டி, சமவெளியினூடே வெகு தூரம் பரவியிருந்தது. வெகு தூரத்தில், மக்கள் நீர் நிறைந்த, வெள்ளம் பரவிய வயல்கள் ஊடாகத் தங்கள் மாடுகளை ஒட்டிச் சென்றார்கள். தங்கள் உடைமைகளை மூட்டைகட்டித்தலைகளில் அல்லது தோள்களில் சுமந்தபடி, தங்கள் வீடுகளை விடுத்து, மேட்டு நிலம் தேடிப் போனார்கள்.

எங்கும் தண்ணிர் மயம். உலகமே ஒரு பெரிய ஆறு ஆகிவிட்டது. ஆற்றின் வனப்பகுதியில் நின்ற மரங்கள் கூட, நீரிலேயே முளைத்தெழுந்த சதுப்புநில மரங்கள் போல் தோன்றின.

சிறிது நேரத்தில் மரப்பலகைகள், சிறு மரங்கள் செடிகள், பிறகு ஒரு மரக் கட்டில் முதலியன தீவைக் கடந்து மிதந்து செல்வதை அவள் கண்டாள். சீதாவின் பயம் உறுதிப்பட்டது.

அவள் தனக்கு உணவு தயாரித்துக்கொள்ளத் தீர்மானித்தாள். வெளியே பார்த்தபோது, பாறைகளிடையே நீர் தேங்கிக்கிடப்பதை அவள் கண்டாள். அது மழைத் தண்ணிரா, ஆற்றுப் பெருக்கா என்று தெரிய வில்லை.

அவளுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அறையின் ஒரு மூலையில் பெரிய தகரப்பெட்டி இருந்தது. அது சீதாவின் அம்மாவுக்கு உரியது. பயனுள்ள, மற்றும் மதிப்புள்ள பொருள்களை அதில் திணித்து, அதைக் கனமாக்கிவிட்டால்-ஆறு தீவுக்குள் வந்துவிட்டாலும் கூட-அது அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்....

தாத்தாவின் ஹூக்கா பெட்டிக்குள் போனது. பாட்டியின் கைத்தடியும் போயிற்று. அப்படியே பருப்பு, மசாலா வகைகள் கொண்ட சிறுசிறு டின்கள் பலவும் போயின. சீதா மரத்தின் மீது பல மணி நேரம் கழிக்க நேர்ந்தாலும் கூட, அவள் மீண்டும் கீழே வந்ததும் தின்பதற்கு ஏதேனும் இருக்குமே!

சீதா பெட்டியை நிரப்புவதில் தீவிரமாக இருந்ததால் குதிகால்களைக்

35