பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒரு பெரிய சாம்பர் மான் தண்ணிரைச் சிதறியடித்து வந்தது. அது நீந்த நேரவில்லை. அது மிக உயரம், அதன் தலையும் தோள்களும் நீருக்கு மேலாகவே இருந்தன. அதன் கொம்புகள் பெரியன, அழகானவை.

"இதர மிருகங்களும் வரும். புலி கூட வரும். நாம் மரத்தின் மேல் ஏறிக்கொள்ளலாமா?" என்று சீதா கேட்டாள்.

"படகில் நாம் பத்திரமாக இருப்போம். நீபடுத்துத் துாங்கு. நான் காவல் காப்பேன்" என்று கிருஷ்ணன் சொன்னான்.

சீதா படகில் படுத்துக் கண்களை மூடினாள். படகின் புறங்களில் தட்டிச் சென்ற நீரின் ஒசை அவளைத் தாலாட்டி விரைவில் உறங்க வைத்தது. ஒரு சமயம், ஏதோ ஒரு பறவை தலைக்கு மேலே கூவியபோது, அவள் கண்விழித்தாள். தலையைத் தூக்கிப் பார்த்தாள். கிருஷ்ணன் விழிப்போடிருந்தான், படகின் முன்புறம் இருந்த அவன், அவளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் முறுவலித்தான்.

கிருஷ்ணன் படகின் அடிப்பாகத்தில் படுத்துத் தூங்கினான். மேல் நோக்கிய அவன் முகத்தில் ஒரு இலை விழுந்தது. அது அவனை எழுப்ப வில்லை. அவன் கன்னத்தின் மேல் அது கிடந்தது, அங்கேயே முளைத்திருந்தது போல.

முடிவாக அவன் கண்விழித்தான்-கொட்டாவி விட்டான், சோம்பல் முறித்தான்; சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

"தண்ணிர் மேலும் அதிகரிக்கவில்லை. ஆனால் எனக்குப் பசிக்கிறது" என்று கூறினான்.

"எனக்கும் தான்" என்றாள் சீதா.

அவன் கடைசியாக இருந்த இரண்டு மாம்பழங்களை எடுத்துக் கூடையைக் காலி செய்தான். கடைசி மாம்பழங்கள்" என்றான்.

தின்று முடித்ததும், கிருஷ்ணன் படகை மரங்களினூடாகச் செலுத்தினான். வெள்ளம் நிறைந்த காட்டில் சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் மிதந்து சென்றார்கள். மழையில் குளித்த மரங்களின் கிளைகளிலிருந்து அவர்கள் மீது நீர் சொட்டியது. சில கொடிகளையும் கிளைகளையும் அவர்கள் துடுப்புகளினால் தள்ள நேரிட்டது. சிலவேளை, நீரில் மூழ்கியிருந்த செடிகள் அவர்களைத் தடுத்தன. ஆயினும் மதியத்துக்கு முன் அவர்கள் காட்டை விட்டு வெளியேறினார்கள்.

தொலைவில் ஒரு ஊர் தெரிந்தது. அது மேட்டின் மீதிருந்தது. அவர்கள் வெள்ளம் பரவிய வயல்கள் மீது படகில் போனார்கள். வரவர ஆழம் குறைந்தது.

அந்தக் கிராமத்தின் மக்கள் அன்புடன் உதவினர். சீதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் உணவும் பாதுகாப்பும் தந்தார்கள். சீதா தன் தாத்தா

43