பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

கேட்டு நிலைமைகளை ஆராய்ந்து முறை வழங்கப்படவேண்டும்.

மக்கள் அன்பையும், பாராட்டையும் பெறுவதில் அதிகாரம் செலுத்துபவர்கள், கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். மக்கள் மனம் வருந்தி, அச்சத்தின் காரணமாக முணுமுணுத்திடும் நிலை ஒருபோதும் உண்டாகக் கூடாது என்பதை அதிகாரம் செலுத்துபவர்கள், சட்டத்தை நிறைவேற்றுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களுக்குத் தக்க பாதுகாப்பும், அமைதியும் அளிப்பதன் மூலமே அதிகாரம் செலுத்துபவர் களுக்கும், சட்டத்திற்கும் மதிப்பு ஏற்படும்.

இரக்கம்

உனக்கு என்ன என்ன வேண்டும் என்று நீ நினைக்கும்போதும், உன் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள முனையும்போதும் இயற்கையை நினைத்துக் கொள். உனக்குப் பேசவும், சிந்திக்கவும் அருள் புரிந்தது அது. உனக்கு வேண்டியதை நீ பெற்றுக் கொள்ளவும், உன்னிடம் உள்ளதை வேண்டியவர்களுக்கு நீ அளிக்கவும் வேண்டும்.

உனக்குத் தேவையான உணவும், உடையும் இருப்பிடமும், தக்க உடல் பாதுகாப்பும் அனைத்து ஏந்துகளையும் உனக்குச் சமுதாயம்தான் அளிக்-