பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13


“அதிலென்ன சந்தேகம், கோமதி? அதனாலேதான் தேசியக் கொடியை நம் நாட்டின் சின்னமாகவே வச்சிருக்காங்க. அதை பயபக்தியுடனும் மரியாதையுடனும் கையாள வேண்டும். இதற்கென தனி ஒழுங்கு முறை உண்டு. அதன் படிதான் தேசியக் கொடியைக் கையாளவேண்டும்.

மாமாவைத் தொடர்ந்து ரகு பேசினான்:

“எங்க பள்ளிக்கூடத்தில் கூட இதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க, மாமா. காலையில் கொடியை, எப்படி ஏத்தனும், மாலையில் எப்படி இறக்கணும்’னு சொல்லிக் கொடுத் திருக்காங்க.”

ரகு கூறி முடித்ததும் கோமதி சொன்னாள்:

“அதோட, எந்த எந்த சமயங்கள்’லே தேசியக் கொடியைப் பயன்படுத்தலாம்’னும் சொல்லியிருக்காங்க.”

இருவர் கூறியதையும் ஆமோதித்த மாமா மேலும் சொன்னார்.

“நம் தேசியக் கொடி நம் நாட்டின் மிக உயர்ந்த சின்னம். அதற்கு நாம் எல்லோரும்