பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21

னர். மாமா கனைத்துக் கொண்டு கதை சொல்லத் தொடங்கினார்.

“முன்பு ஒரு சமயம் காட்டுக் குதிரை ஒன்று இருந்தது. அது தான் மேய்வதற்கான பகமையான புல்தரையைத் தேடி அலைந்தது. காடு, மலை, வனாந்தரம் எங்கும் திரிந்தது. எங்கு சென்றும் பசுமையான புல்வெளியைக் காண முடியவில்லை.

இறுதியாக ஒரு பரந்த புல்வெளிப் பகுதிக்கு வந்தது. அது இரண்டு மலைகளுக்கிடையே அமைந்திருந்தது. அங்கே குதிரை எதிர்பார்த்த பசுமையான புற்கள் நிறைய இருந்தன. காண்பதற்குப் பச்சைப் பசேல் எனக் காட்சியளித்தது. அப்புல்வெளியைச் சுற்றிலும் காடுகள் இருந்தன. அங்கு மனித நடமாட்டம் எதுவும் இல்லை.

யாருமே இல்லாத பரந்த புல்வெளி. தன்னந்தனியாக அக் காட்டுக் குதிரை மேயும். நல்ல வெயில் நேரமாக இருந்தால் தூரத்தில் இருந்த மரத்தடியில் இளைப்பாறும். அருகே ஆற்று ஒடை ஒடிக்கொண்டிருந்தது. தாகம் எடுத்த போதெல்லாம் அதில் சென்று தண்ணிர் குடித்துத் தாகத்தைப் போக்கிக் கொள்ளும். மீண்டும் புல்வெளியில் வந்து மேய்ந்து கொண்டிருக்கும்.