பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23



ஒடையில் தண்ணிர் குடித்துவிட்டு காட்டுக் குதிரை திரும்பியது. புல்வெளியில் மான் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது. குதிரைக்குப் ‘பகீர்’ என்றது. தனக்குச் சொந்தமான புல் வெளியில் மான் மேய்வதா? குதிரைக்குக் கோபம் கோபமாய் வந்தது. தனது சுதந்திர வாழ்வுக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி வெகுண்டது.

மகிழ்ச்சியாக மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது. பயங்கரமாகக் கனைத்தபடி மானிடம் சென்றது. கடுமையான குரலில் மானைப் பார்த்து “நீ யார்?” என்றது. "என் அனுமதி இல்லாமல் என் புல்வெளியில் எப்படி நீ நுழைய லாம்?” என்று கேட்டது. "எனக்குச் சொந்த மான புல்வெளியில் உன் இஷ்டப்படி மேய்வதா? உடனே புல்வெளியை விட்டு வெளியேறி ஓடி விடு” என்று மானைப் பார்த்து கோபமாகக் கூறி விரட்டியது.

காட்டுக் குதிரை ஆத்திரமாகப் பேசியதைக் கேட்ட மானுக்குக் கோபம் வந்தது. என்றாலும், கோபத்தை அடக்கிக் கொண்டது. குதிரையைப் பார்த்து “இந்தப் புல்வெளி உனக்குச் சொந்தமா? எப்போதிருந்து? இது காட்டிலுள்ள புல்வெளி. இது உனக்குச் சொந்தம் என்றால் இது எனக்கும் சொந்தம்தான். உன்னைப் போல