பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27



உன் முதுகில் ஒரு துணித் தலையணையைக் கட்டி, அதன்மேல் ஏறி அமர்ந்து கொள்கிறேன். நான் கீழே விழாமல் இருக்க உனக்குக் கடி வாளம் போட்டு அதைக் கையில் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீ மானைப் பின் தொடர்ந்து வேகமாக ஒடு. அப்போது அதை நான் ஈட்டியால் குத்திக் கொன்று விடுவேன். மான் இறந்து போகும். பிறகு உனக்குப் போட் டியே இருக்காது. எப்போதும் நீயே அந்தப் பரந்த வெளியில் தங்கிக் கொள்ளலாம். அங் கிருக்கும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கலாம். என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான்.

அந்த மனிதன் கூறிய யோசனை குதிரைக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது மானை விரட்டியடிக்க எண்ணியது. எனவே, சிறிதும் யோசிக்காது அதற்கு உடனடியாகச் சம்மதித்து விட்டது.

அந்த மனிதன் குதிரையின் முதுகில் தலையணை ஒன்றை வைத்து இறுகக் கட்டினான். கயிற்றால் அதற்குக் கடிவாளம் போட்டான் அதனை ஒரு கையில் கெட்டியாகப் பிடித்தபடி குதிரை மீது ஏறி அமர்ந்தான். மற்றொரு கையில் ஈட்டியைப் பிடித்துக் கொண்டான். மானை விரட்டப் புறப்பட்டான்.

மனிதன் முதுகில் அமர்ந்திருப்பது குதிரைக்குப் பாரமாக இருந்தது. இருந்தபோதிலும்