பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29



சுதந்திரமாக மேயவந்த புள்ளிமானை விரட்ட முற்பட்ட காட்டுக் குதிரை தனது சுதந்திரத்தையே இழந்து நின்றது. மனிதனுக்கு அடிமையாக உழைக்கும் ‘வீட்டுக் குதிரை’ ஆகி விட்டது. அன்று முதல் இன்று வரை வழிவழியாகக் குதிரைகள் மனிதர்களைச் சுமந்து திரிகின்றன. அவர்கள் ஏறிச் செல்லும் வண்டிகளை இழுத்துச் செல்லும் பிராணிகளாகவும் உழைத்து வருகின்றன.

பிறர் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றால் நம் சுதந்திரம் பறிபோய்விடும். பிறருக்குத் துன்பம் செய்ய முற்பட்டால் தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கும் கூட அத்துன்பம் தொடரும். இந்த உண்மையையே ‘காட்டுக் குதிரை’ `வீட்டுக் குதிரை’யான செயல் உலகுக்கு இன்று வரை எடுத்துக்காட்டி வருகிறது.

மாமா கூறிய குதிரை-மான் கதையைக் கேட்ட சகோதரர்கள் மூவரும் மிகவும் மகிழ்ந்தனர். சுதந்திரத்தின் சிறப்பை உணர்ந்தனர். அதைக் காப்பதில் ஆர்வம் கொண்டனர். தங்கள் சுதந்திரத்தைப் போன்றே பிறர் சுதந்திரத்தையும் மதிக்கக் கற்றுக் கொண்டனர்.

புத்தாடை உடுத்தி, சுதந்திரம் பற்றிய புதிய சிந்தனையுடன் விடுதலை நாள் விழாவில் பங்கு கொள்ள, பள்ளி நோக்கி விரைந்து நடந்தனர். அதைக் காண மாமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.