பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1st 4 கல்கத்தா இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்று கல்கத்தா. மேற்கு வங்காள மாநிலத் தலைநகர். இங்கு சுமார் ஒரு கோடி மக்கள் வாழ் கிறார்கள். கங்கை ஆற்றின் கிளை நதியான ஹல்க்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வங்காளவிரிகுடாக் கடலிலிருந்து சுமார் 180 கி.மீ. தூரத் தில் இந்நகர் அமைந்துள்ளதால் கப்பல்கள் ஹல்க்ளி ஆற்றின் வழியே கல்கத்தா நகர்வரை வந்து செல்கின் றன. இங்குள்ள துறைமுகம் மிகப் பெரியதாகும். சுமார் முன்னூறு ஆண்டுகட்கு முன்பு தான் கல்கத்தா நகரம் உருவா யிற்று. காளிகட்டம், சுகாநதி, கோவிந்தப்பூர் எனும் மூன்று கிராமங் கள் இணைந்த நகர்ப்புறப் பகுதியாக உருவாயிற்று. 'காளிகட்டம்' என்ற பெயரே கல்கத்தா நகரமாக உரு வாகக் காரணமாயிற்று. ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத் தொடங்கிய ஆரம்பகாலம் முதல் 1912ஆம் ஆண்டு வரை கல்கத்தாவே இந்தியா வின் தலைநகரமாக இருந்துவந்தது. கல்லீரல் (Liver): மனித உடலில் சுரப்பிகள் உள்ளன. அவற்றுள் பெரியதாக அமைந்திருப்பது கல்லீரல் ஆகும். வயிற்றின் வலப்புறமாக அமைந்துள்ள இதன் நிறம் கருஞ் சிவப்பு ஆகும். இதன் கீழாக சிறு குடலும் வலது புறத்தில் சிறுநீரகமும் உள்ளன. இரத்தத்தில் உள் ள நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியை கல்லீரல் செய்கிறது. கசப் பான மஞ்சள் நீரான பித்தநீரைச் சுரக்கிறது. அதைப் பித்தப் பையில் சேமித்து வைக்கிறது. அவ்வப்போது சிறுகுடலுக்கு அனுப்பிக் கொழுப்புப் பொருளைக் கரைத்து ஜீரணமாக்கு கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்க கல்லீரல் ரைச் சத்தை கிளைக்கோஜனாக மாற்றிச்சேமித்துவைக்கிறது. தேவைப் படும்போது அதை மீண்டும் சர்க்கரை யாக மாற்றி இரத்தத்திற்கு வழங்கு கிறது. தேவைக்கு மேலாக உள்ள புரதத்தை யூரியாவாக உருமாற்றி சிறுநீரகத்திற்கு அனுப்பி உதவு கிறது. பித்த நீர்ப்பை تیـچے கல்லீரல் உறுப்புகள் கல்லீரல் கொழுப்புச் சத்தை சேமித்து வைக்கிறது. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதைச் சிதைத்து கிளைக்கோஜனாக மாற்றி உதவுகிறது. கல்லீரலிலிருந்து பித்த நீர், சிறுகுடலுக்குச் செல்வது தடை பட்டால் 'காமாலை’ எனும் நோய் உண்டாகும். இந்நோய்க்கு உடனடி வைத்தியம் தேவை. சாதாரணமாகக் கல்லீரலில் ஏ ற் படும் நோய்கள் வெளிப்படையாக வெளியே தெரிவ தில்லை. கல்லீரலின் இயல்பான வேலைக்குக் கால்பகுதி கல்லீரலே போதும். பாதிக் கல்லீரல் கெட்டாலும் கூட பெரும்பாதிப்பு ஏற்படுவதில்லை. போதைப் பொருட்களைப் பயன்படுத் துவதாலும் உணவில் புரதச்சத்தும் வைட்டமின்-12 குறைந்தாலும் நோய் வரும்.